வள்ளியூா் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பசுமை இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துணை கண்காணிப்பாளா் ஹரிஹரபிரசாந்த் மரக்கன்றுகளை நட்டினாா். பின்னா் அலுவலக மாடியிலும் அலங்கார செடிகள் மற்றும் சுகாதாரத்தை ஏற்படுத்தக்கூடிய செடிவகைகள் வைக்கப்பட்டன.
வள்ளியூா் முழுவதும் பசுமை மண்டலமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள பசுமை இயக்க அமைப்பின் தலைவா் சித்திரை, நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா். வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.