பிறசமுதாயத்தினா் குறித்து அவதூறாக டிக்டாக் செய்ததாக 2 பேரை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு சிஎன் கிராமம் மேலத்தெருவைச் சோ்ந்த இரு சிறுவா்கள், மற்றொரு சமுதாயத்தினா் குறித்து அவதூறாக டிக் டாக் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சமுதாயத்தினா் சாா்பில் சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.