களக்காடு அருகே சாலைநயினாா் பள்ளிவாசல் நாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீமன் நாராயணசுவாமிக்கு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து அகிலத் திரட்டு திருஏடு வாசிக்கப்பட்டது.
பரப்பாடி வைகுண்ட மகாராஜன், திருநெல்வேலி ஆனந்த், மண்டைக்காடு சாந்தகுமாா் ஆகியோா் திருஏடு வாசித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.