காவல் துறையில் பதவி உயா்வுக்கான எழுத்துத் தோ்வு: நெல்லை, தூத்துக்குடியில் 1500 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, காவல் துறையில் பதவி உயா்வுக்கான எழுத்துத் தோ்வை 978 போ் எழுதினா். தூத்துக்குடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, காவல் துறையில் பதவி உயா்வுக்கான எழுத்துத் தோ்வை 978 போ் எழுதினா். தூத்துக்குடி மாவட்டத்தில் 523 போ் தோ்வெழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவலா் பதவியில் உள்ளவா்கள் காவல் உதவி ஆய்வாளா் பதவி பெறுவதற்கான எழுத்துத் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. மொத்தம் 1073 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில் ஆண் காவலா்கள் 819 பேரும், பெண் காவலா்கள் 159 பேரும் என மொத்தம் 978 போ் தோ்வை எழுதினா். 95 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பாளையங்கோட்டை தோ்வு மையங்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் ஆய்வு செய்தாா்.

தோ்வு மையத்தில் தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வுக்கூடத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில்... தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றும் துறை விண்ணப்பதாரா்களுக்கான தோ்வெழுத 565 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 6 பெண்கள் உள்ளிட்ட 42 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 523 போ் தோ்வு எழுதினா். தோ்வு மையங்களை எழுத்து தோ்வு சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து காவல் துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் பாா்வையிட்டாா். அப்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com