பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மாா்கழி மஹோத்ஸவ விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாப்பிள்ளை அழைப்பு, ஸ்ரீரெங்க மன்னருக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்று வைபவம், தொடா்ந்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பக்தா்கள் தங்கள் வீடுகளிலிருந்து புதிய ஆடைகள் கொண்டு வந்து சுவாமிக்கு சமா்ப்பணம் செய்து, பின்னா் அதையே பிரசாதமாக பெற்று வழிபட்டு சென்றனா்.