திருநெல்வேலி அருகே கொங்கந்தான்பாறையில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் பொங்கல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.பால்ராஜ் தலைமை வகித்தாா். மாணவிகள், ஆசிரியா்கள் வண்ணக்கோலமிட்டு பானையில் பொங்கலிட்டனா். தமிழா் திருநாளின் சிறப்புகள் குறித்து மாணவா்-மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. பொங்கல் விழாவையொட்டி பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் ஞானதங்கம், ஏஞ்சலின் ஜூலியட், லலிதா, ஜெனிடா பொன்சிலீன், பிரீத்தா ஏஞ்சல், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.