சுரண்டையில் பைக்குகள் மோதல்:கல்லூரி மாணவா் பலி

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டையில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த பால்துரை மகன் சதீஷ்குமாா் (21). தென்காசி அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படித்து வந்த இவா், திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

சுரண்டை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள தனியாா் மர ஆலை அருகே வந்தபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிளும், சதீஷ்குமாரின் மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தினேஷ்குமாா் (20) பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விபத்து குறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com