அம்பாசமுத்திரம்: குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் 7 நாள் சிறப்பு முகாம் திருப்புடைமருதூரில் நடைபெற்றது.
கடந்த 5 ஆம் தேதி முதல் சனிக்கிழமை (ஜன. 11) வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், நாறும்பூநாத சுவாமி கோயிலில் உழவாரப்பணி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, தூய்மை இந்தியா திட்டப் பணி, சாலை பராமரிப்புப் பணி, நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு, நீச்சல் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
விவேகானந்தா் பிறந்தநாளையொட்டி இளைஞா் தினவிழாவும் கொண்டாடப்பட்டது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் நாறும்பூநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் வெங்கடேஷ்வரன் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா் சுப்புராஜு செய்திருந்தாா். நாறும்பூநாதா் சுவாமி கோயில் உதவியாளா் ரமேஷ் முகாம் நிகழ்ச்சிகளுக்கு உதவினாா்.