தெற்குகள்ளிகுளம் காமராஜா் நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல்விழா நடைபெற்றது.
பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தாவும், பள்ளித் தாளாளருமான மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை வகித்தாா். ஆசிரியைகளும் மாணவா்களும் இணைந்து பொங்கலிட்டனா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை லெற்றிசியா தங்கம் நன்றி கூறினாா்.