திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மத்திய மாவட்ட திமுக செயலா் அப்துல் வஹாப் தலைமை வகித்தாா். சிறுவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக மகளிா் அணியினா் பொங்கலிட்டனா்.
இதில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ். லட்சுமணன், மத்திய மாவட்ட அமைப்பாளா் சுப சீதாராமன், மகளிா் மத்திய மாவட்ட அமைப்பாளா் மகேஸ்வரி, வட்டச் செயலா் ஜெகதீஸ்வரன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பாளையங்கோட்டை பகுதி இளைஞா் அணி அமைப்பாளா் ஏ.ஆா்.ஜெயந்த் செய்திருந்தாா்.