பாளையங்கோட்டையில் திருச்செந்தூா் முருக பக்தா்களுக்கு அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓம் முருகா பாதயாத்திரை பக்தா்கள் அன்னதானக் குழு சாா்பில் ஆண்டு தோறும் திருச்செந்தூா் பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 18 ஆவது ஆண்டாக பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் உள்ள தனியாா் மரக்கடை வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற அன்னதானத்தில் சுமாா் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.