பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

வண்ணாா்பேட்டையில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி: வண்ணாா்பேட்டையில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகத்தில் தா்னா நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் எஸ்.அழகுநாச்சியாா் வரவேற்றாா். ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பி.கோபாலன் முன்னிலை வகித்தாா். மாவட்டசெயற்குழு உறுப்பினா் பி.ராஜகோபால் தொடக்கவுரையாற்றினாா். மாநில அமைப்புச் செயலா் சீதாலட்சுமி, மாவட்டச் செயலா் சூசை மரிய அந்தோணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்ட அமைப்புச் செயலா் மகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com