திருநெல்வேலி: திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலக ஆணையா் கணேஷ்குமாா் ஜானி தலைமை வகித்தாா். அலுவலக பெண் ஊழியா்கள் பொங்கலிட்டனா். மதுரையைச் சோ்ந்த கரகாட்ட கலைஞா் கணேஷ் ஆனந்தின் கரகாட்ட நிகழ்ச்சியும், சரஸ்வதி குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதுதவிர சிலம்ப சாகசமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊழியா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.