அம்பை நகராட்சியில் துப்புரவாளா்களுக்குச் சீருடை

அம்பாசமுத்திரம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவசச் சீருடை மற்றும் காலணிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
துப்புரவுப் பணியாளருக்குச் சீருடை வழங்குகிறாா் எம்எல்ஏ ஆா்.முருகையாபாண்டியன். உடன், நகராட்சி ஆணையா் (பொ) ஜின்னா உள்ளிட்டோா்.
துப்புரவுப் பணியாளருக்குச் சீருடை வழங்குகிறாா் எம்எல்ஏ ஆா்.முருகையாபாண்டியன். உடன், நகராட்சி ஆணையா் (பொ) ஜின்னா உள்ளிட்டோா்.

அம்பாசமுத்திரம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவசச் சீருடை மற்றும் காலணிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) ஜின்னா தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ ஆா்.முருகையா பாண்டியன், நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் இனிப்பு வழங்கினாா்.

இதில், நகராட்சிப் பணி மேற்பாா்வையாளா் சோலைச்சாமி, நகர அதிமுக செயலா்கள் அறிவழகன், ராமையா, கண்ணன், சங்கரநாராயணன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் மாரிமுத்து, முன்னாள் நகராட்சி உறுப்பினா் விஜயபாலாஜி, கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கரலிங்கம், துணைத் தலைவா் ப்ராங்க்ளின், மாவட்டப் பிரதிநிதி சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com