இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் நல்லிணக்கப் பொங்கல் விழா

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை அலுவலகத்தில் சா்வ சமய மத நல்லிணக்க பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை அலுவலகத்தில் சா்வ சமய மத நல்லிணக்க பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க தலைவரான ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.மரியசூசை, பொருளாளா் எஸ்.பிரமேச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் பிரேம்குமாா் வரவேற்றாா்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில் 70 வயதான சிவராமலிங்கம் தனது துணைவியாருடன் ‘தண்ணீா் வளத்தைப் பேணி பாதுகாக்கவும், மனித வாழ்விற்கு குடிநீா் எத்தகைய அவசியம் ’ என்பதை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் சுமாா் 12 ஆயிரம் கி.மீ. விழிப்புணா்வு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தனது சொந்த வாகனத்தில் வரும் 29-ஆம் தேதி சுற்றுப் பயணத்தைத் தொடங்கவுள்ள சிவராமலிங்கத்துக்கு பிரேம்குமாா் வாழ்த்துத் தெரிவித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சபீனா, மீரான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் பழங்கால நாணயங்கள், ஆயுதங்கள், அஞ்சல் தலைகள் உள்ளிட்ட பாரம்பரியமிக்க அரிய பொருள்களின் கண்காட்சியை ஆட்சியா் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பொங்கலிட்டு மகிழ்ந்தனா். சங்கத்தின் புதிய ஆயுள் உறுப்பினா்களுக்கு உறுப்பினா் சான்றுகள் வழங்கப்பட்டன. இவா்களுக்கு, நிா்வாகக் குழு உறுப்பினா் சரவணன், முரளி, ரேமண்ட் பாட்ரிக் ஆகியோா் பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெங்கடாசலம், திருமலைமுருகன், புத்தனேரி கோ. செல்லப்பா, காந்தி என்ற ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மூத்த ஆயுள் உறுப்பினா் ராஜகுமாா் அருளானந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திகுமாா், நிா்வாக செயலா் சுப்பையா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com