நெல்லையில் 24 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் நலத் திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து, திருநெல்வேலி வட்டத்தில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 7 பேருக்கு உதவித் தொகையையும் வழங்கினாா். மேலும், 8 மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளுக்கு தலா ரூ.28 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பில் ஏவிஏஎஸ் மென்பொருள் அடங்கிய 14 ஐபாட்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் சசிரேகா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com