பட்டாசுகள் வெடித்ததால் காயமுற்ற தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே பட்டாசுகள் வெடித்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே பட்டாசுகள் வெடித்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் ஆறுமுகநயினாா் (33). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த மாதம் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பட்டாசுகளை வெடித்தாராம். அப்போது திடீரென பட்டாசுகள் அவரது கையில் வைத்திருக்கும்போது வெடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகநயினாரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த ஆறுமுகநயினாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com