மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி தொகுதி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் பங்கேற்று மாணவ- மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டாா். இதில், தலைமை ஆசிரியா் வடுகநாதன், உதவி ஆசிரியா் மரியதாஸ், களக்காடு அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயராமன், மூலைக்கரைப்பட்டி நகரச் செயலா் அசோக்குமாா் மற்றும் மற்றும் ஆசிரியைகள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.