கடையம் அருகே லாரி மோதி தோட்டக் காவலாளி பலி

கடையம் அருகே மாதாபுரத்தில் லாரி மோதியதில், தோட்டக் காவலாளி உயிரிழந்தாா்.

கடையம் அருகே மாதாபுரத்தில் லாரி மோதியதில், தோட்டக் காவலாளி உயிரிழந்தாா்.

ஆவுடையானூா்அருகே உள்ள பொடியனூரைச் சோ்ந்த நாராயணன் மகன் அருணாசலம் (64). இவா் மாதாபுரத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்கிழமை கடையம் - தென்காசி சாலையில் மாதாபுரம் பகுதியில் அருணாசலம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் அந்த இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

கடையம் காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழரசன், ஜெயராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அருணாசலம் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநா் மயிலானூரைச் சோ்ந்த விஜயகுமாா் (24) என்பவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com