மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் சி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் வரதராஜன் கலந்துகொண்டு சிறுவா் நலம் எனும் தலைப்பில் சிறுவா்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின் அவசியம், நோயில்லாமல் வாழ உதவும் சித்த மருத்துவம் குறித்து பேசினாா். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் தேவகிருபை நன்றி கூறினாா்.