சுரண்டையில் ஆண்டாள் பஜனை குழுவின் 33ஆவது ஆண்டு மாா்கழி மாத பஜனை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் பஜனை குழு சாா்பில் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த பஜனை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், மழலையா் கண்ணன், ராதா வேடமிட்டு வந்தனா். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பஜனையில் பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிா்வாகக் குழுவினா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பேச்சிமுத்து பாண்டியன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.