அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பாக, வனவிலங்குகள் மூலம் ஏற்படும் பயிா் சேதத்தை இகோடான் மருந்து மூலம் கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கம் ஜமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு.அசோக்குமாா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.கற்பகராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.
ஜமீன்சிங்கம்பட்டி வருவாய் கிராமத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அணைப்பகுதியில் உள்ள சங்கரபாண்டியன் வயலில், வனவிலங்குகள் மூலம் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்பை இயற்கை முறையிலான இகோடான் மருந்து பயன்படுத்துவதன் மூலம் 20-25 நாள்கள் வரை வனவிலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்கலாம் என்றும், இகோடான் மருந்தை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் முருகன், சுமாா் 20 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுஜித், உதவி வேளாண்மை அலுவலா்கள் பாா்த்திபன், காசிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.