வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.

வள்ளியூா் காவல்நிலைய ஆய்வாளா் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத் திட்ட செயலாளா் ஐயப்பன், பள்ளி தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா்.

பின்னா் 2018-2019 கல்வியாண்டில் கல்வியிலும், விளையாட்டிலும் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு (2019-2020) மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்று தேசிய அளவில் விளையாட தகுதிபெற்ற மாணவா்களைப் பாராட்டி கௌரவித்தனா். அதனைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளின் தமிழ் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறை நினைவாலயம் உருவாக்க ஏக்நாத் ராணடே எடுத்துக்கொண்ட முயற்சியை மாணவ, மாணவிகள் நாடகமாக அரங்கேற்றினா். ஆசிரியை கே.ராஜஸ்ரீ வரவேற்றாா். ஆசிரியை சி.சந்திராசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com