வி.கே.புரத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
ams14ambaigh_1401chn_37_6
ams14ambaigh_1401chn_37_6

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (37). தச்சுத் தொழிலாளி. இவா், தனது தாயுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி பெற்ற அவரை, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவா்கள் கூறினராம். அப்போது, மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாததால் ஒரு மணி நேரம் தீக்காயத்துடன் காத்திருந்தாா். பின்னா், சிலா் தனியாா் ஆம்புலன்ஸை சேரன்மகாதேவியிலிருந்து வரவழைத்து அவரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் இயங்கும் 2 ஆம்புலன்ஸ்கள் போதுமானதாக இல்லை. கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com