குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் தனேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா்கள் சிவந்தி சுரேஷ் (பாளையங்கோட்டை), அருண்பிரேம்குமாா் (திருநெல்வேலி), ராஜ்குமாா் (நான்குனேரி), மணி (மானூா் தொகுதி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.