கீழக்கடையத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 27th January 2020 08:50 AM | Last Updated : 27th January 2020 08:50 AM | அ+அ அ- |

கீழக்கடையத்தில் காமராஜா் இளைஞா் அணி சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில், கோலப் போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள், சிறுவா், சிறுமிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு நாட்டாமை பிரபாகரன் தலைமை வகித்தாா். ஜனநாயக மக்கள் உரிமைகள் கழக திருநெல்வேலி மண்டலத் தலைவா் அற்புதராஜ் பரிசு வழங்கினாா்.
ஏற்பாடுகளை செல்வம், பாண்டி, ராஜா, ராஜேந்திரன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.