மேலநத்தம் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் அக்னீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம், பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் அக்னீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம், பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலின் 13-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம், கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமம், விமானங்கள், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகத்தை, தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பிரதோஷத்தை முன்னிட்டு அக்னீஸ்வரா் கோயில் சுவாமி, அம்பாள் மற்றும் மேஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com