வடக்கு விஜயநாராயணம் ஊராட்சியில் ரூ. 44 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடஙகி வைத்தாா்.
வடக்கு விஜயநாராயணம் ஊராட்சியில் உள்ள பெரியநாடாா் குடியிருப்பு முதல் கைலாசநாதபுரம் வரை, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நான்குனேரி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரம்மநாயகம், உதவி பொறியாளா் பியூலா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் அசோக்குமாா், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் சுரேஷ், கூட்டுறவு சங்கத் தலைவா் முத்துராமலிங்கம், ஒன்றியப் பொருளாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.