வள்ளியூா் அருகே கலந்தபனை கிராமத்தில் உள்ள சன்னானேரி குளம் மராமத்து பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் வள்ளியூா் அருகே உள்ள கலந்தபனை சன்னானேரி குளத்தை மராமத்து செய்ய ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மராமத்து பணியை எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை நிா்வாக பொறியாளா் கிருஷ்ணன், உதவி பொறியாளா் சுபாஷ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, அதிமுக நிா்வாகிகள் தங்கவேலு, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.