சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து இதுவரை 72 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே லட்சுமியாபுரம் 4ம் தெருவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள 4 பேர்கள், ஆதி சங்கர விநாயகர் கோவில் தெருவில் கனரா பேங்க் ஊழியரின் மனைவி, ஏற்கனவே முல்லை நகரில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள 1 நபர், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் முல்லை நகரைச் சேர்ந்த 1 நபர், அதே பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள 2 பேர், பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள முல்லை நகர் 4ம் தெருவை சேர்ந்த 2 பேர், நேரு தெருவை சார்ந்த ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள 1 நபர் , எம் பி கே கோல்டு லோன் வங்கியில் உள்ள களப்பணியாளர் திருவுடையான் சாலை 1ம் தெருவை சேர்ந்த 1 நபர், திருவிக புதுத்தெருவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்த 3 பேர், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு கோமதியபுரம் தெருவில் உள்ள நபரின் தொடர்புள்ள ஒரு நபர், தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபரின் தொடர்பில் உள்ள கோமதியபுரம் 1 ம் தெருவில் உள்ள 2 பேர், பனையூரில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் உள்ள முல்லை நகரைச் சேர்ந்த ஒரு நபர் 1 , தனியார் டி.வி.ஷோரூமில் விற்பனையாளராக வேலை பார்த்துவரும் கீழ செக்கடி தெருவைச் சேர்ந்த 1 நபர் என மொத்தம் 19 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் செவ்வாய்கிழமை வரை சங்கரன்கோவிலில் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.