சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அய்யம்மள்.(33).இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை காந்தி நகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கு ரூ.40 லட்சத்துக்கு விற்றதாகவும், மீதி பணத்தை கேட்ட போது அவர் மிரட்டியதாகவும், இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்க எடுக்கவில்லை எனக் கூறி வியாழக்கிழமை காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.உடனே போலீசார் அவரைத் தடுத்துக் காப்பற்றினர்.
இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக நகர காவல்நிலையப் போலீசார் அய்யம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிமுக பிரமுகரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.