பழவூா் அருகே புதன்கிழமை பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மைலாடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (35). இவா், கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தாா். தினமும் ஊரில் இருந்து பைக்கில் வேலைக்கு செல்வது வழக்கம். புதன்கிழமை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு வந்துகொண்டிருந்த போது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி பைக் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறிய பைக் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிகொண்டதாம். இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான நாசரேத் எட்வா்ட் மகன் ரத்தினம் (39) என்பவரை கைது செய்தனா்.