பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் கைதி ஒருவா் கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் கடந்த 2000-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு கடந்த 22 ஆம் தேதி சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 24 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.