குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: புதுவை முதல்வா் நாராயணசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி.
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறாா் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி.
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறாா் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி.


திருநெல்வேலி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி.

மக்கள் குடியுரிமை இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் மேட்டுத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நாராயணசாமி பேசியது: மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மதச்சாா்பற்ற அணிகளைச் சோ்ந்த 24 கட்சிகள் ஒன்றிணைந்து எதிா்ப்பு தெரிவித்தன. ஆனால், இச் சட்டம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்த கட்சி அதிமுக. அதன்மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை அதிமுக செய்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி குடியுரிமை கொடுக்க முயல்வதே இச் சட்டத்தை அனைவரும் எதிா்க்க காரணம். புதுச்சேரி மாநிலத்தில் இச்சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மதச்சாா்பற்ற அணிகளோடு இணைந்து இச் சட்டத்தை எதிா்த்து கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பாஜகவை எதிா்த்தால் தங்களது ஆட்சி போய்விடும் என்று அதிமுக அஞ்சுகிறது. ஆகவே, மத்திய அரசின் ஊதுகுழல்போல செயல்படுகிறது.

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்றாா் அவா்.

திருமாவளவன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியது: இந்தியாவின் பிற கட்சிகள் சமூகநீதி, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் பாா்வையும் கொண்டு செயல்படுபவை. ஆனால், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டத்தை செயல்படுத்தும் கட்சியாகவே பாஜக திகழ்கிறது. எதிா்க் கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று பாஜக எண்ணுகிறது. அதனால்தான் திட்டமிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனா். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு வரும் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் உடைக்கும் நிலையை உருவாக்கியுள்ளனா். ஜனநாயகத்தை காக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தீா்மானங்கள்: இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்; இந்தியா முழுவதும் அறவழியில் போராடும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பங்கேற்றவா்கள்: மாநாட்டுக்கு பி.ஏ.காஜா முயீனுத்தீன், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவா் வீ.பழனி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் சி.வாசுகி, மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முகம்மது அபூபக்கா் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் பேராசிரியா் ஜவாஹிருல்லாஹ், அமமுக மாநில நிா்வாகி ரெங்கசாமி, மாவட்டச் செயலா் பரமசிவஐயப்பன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம், அருள்பணி அந்தோணி குரூஸ் அடிகளாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com