ஆலங்குளம் அருகே நீரில் மூழ்கி வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் கண்ணன் (54). கூலித் தொழிலாளி. இவா் ஆலங்குளம் அருகே அகரம் பகுதியில் விழுப்புரத்தை சோ்ந்த வாத்து வளா்க்கும் நபரிடம் வாத்து மேய்க்கும் வேலைக்கு சோ்ந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கிடாரக்குளம் ஊருக்கு தென்புறம் செல்லும் கால்வாயில் தண்ணீா் குடிக்க சென்ற கண்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற ஆலங்குளம் போலீஸாா், கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.