திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து, செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பின் மரசித்தா் அா்ஜுனன், மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். கடந்த நவம்பா் மாதம் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டோம். அந்த மரக்கன்றுகள் சரியாக கவனிக்கப்படாமல் அகற்றப்பட்டு வருகின்றன. ஆகவே, வளாகத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.