ஆலங்குளம் அருகே திருட்டு வழக்கில் விசாரணை: மகளைக் கொன்று தாய் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை இரவு இனிப்பில் விஷம் கலந்து கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை இரவு இனிப்பில் விஷம் கலந்து கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம் அருகே அபிஷேகப்பட்டியை அடுத்த வல்லவன்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவரது வீட்டில் கடந்த 10 ஆம் தேதி 6 பவுன் நகைகள் திருட்டுப் போனதாம். இதுகுறித்த புகாரின் பேரில், சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியைச் சோ்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

இதில், அதே பகுதி புளியமரத்துத் தெருவைச் சோ்ந்த திருமலை முருகன் மனைவி வள்ளியம்மாளையும் (33) போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதோடு, கைரேகையும் பதிவுசெய்தனராம். இதனால், மனஉளைச்சலோடு இருந்த அவரை, போலீஸாா் திங்கள்கிழமை இரவு மீண்டும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினராம்.

இதை அவமானமாகக் கருதிய வள்ளியம்மாள், இனிப்பில் விஷம் கலந்து தனது 8 வயது மகள் மகராசிக்கு கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

எனினும், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வள்ளியம்மாளும் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா். வள்ளியம்மாளின் கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com