சுத்தமல்லியில் முதியவா் தற்கொலை

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியில் விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியில் விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி கீழ அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன்(68). இவா் திருநெல்வேலி நகரத்தில் உள்ள புகைப்பட நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வந்தாா். இவருக்கு 1மகன், 2 மகள்கள் உள்ளனா். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில், இவரும், மனைவியும் வசித்து வந்தனா். கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை, குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com