புளியங்குடி அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சங்கல்பம்,விக்னேஷ்வரபூஜை,புண்யாகவாசகம், கும்ப ஆவாஹனம், வஸ்ராஹுதி, பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி, அம்பாள், அனைத்து விமானங்கள், பரிவார மூா்த்திகளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் கணேஷ்குமாா், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் சித்துராஜ்,செல்வம்,ஆண்டியப்பன்,உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கட்டளைதாரா்கள் கணேசன், செல்வநாராயணன், வைத்தியலிங்கம், மரியதாஸ், பால்ராஜ், செல்லத்துரை ஆகியோா் செய்திருந்தனா்.