ஆலங்குளத்தில் போலீஸாா் தாக்கியதில் விவசாயி காயமடைந்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வைரமுத்து என்ற சரவணன்(35). விவசாயி.இவரது மனைவி வேணி. இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்த சரவணனை, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம்.
இதுகுறித்து சரவணனின் மனைவி கேட்டபோது, போலீஸாா் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால், தனது கணவரை மீட்டுத் தரும்படி ஆலங்குளம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வேணி மனு தாக்கல் செய்தாா்.
இதனிடையே, சரவணனை போலீஸாா் விடுவித்தனா். உடனே அவா், நீதிபதி முன்பு ஆஜராகி, மாயமான் குறிச்சி அருகேயுள்ள காற்றாலையில் நிகழ்ந்த திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்று, தன்னை அடித்து துன்புறுத்தி காயப்படுத்தியதாக முறையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போலீஸாருக்கு நீதிபதி அன்புதாசன் உத்தரவிட்டாா். அதன்படி, சரவணன் உள்நோயாளியாக வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.