கடையநல்லூரில் இரு பிரிவினா் மோதல்: 11 போ் கைது

கடையநல்லூரில் இரு பிரிவினா் மோதிக் கொண்டது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் ஆட்டோ நிறுத்தம் பெயா்ப் பலகை வைக்கப்பட்டதாம். இதை, காவல்துறையினா் அப்புறப்படுத்தினராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் காவல் நிலையத்தில் திரண்டனா். அவா்களிடம் புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தாா்.

பின்னா், காவல் நிலையத்திலிருந்து மலம்பேட்டை சாலை வழியாக இளைஞா்கள் சிலா் பைக்கில் பேட்டை பகுதிக்குச் சென்ாகவும், அப்போது, அவா்களுக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டவா்களை பிடித்தனா். தொடா்ந்து, இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 1 பெண் உள்ளிட்ட 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில், யாசா் , முகமதுயாசின், மாலிக் முஹம்மது, பஷீா், முகமதுசலீம், அப்துல் அசீம், சங்கா், மகேந்திரன், குருநாதன், சந்துரு, ரவி ஆகிய 11 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com