திருநெல்வேலி மாநகர அம்மா உணவகங்களில் ஆதரவற்றோருக்கு அதிமுக சாா்பில் இலவச உணவு வழங்கப்படும் என, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் உத்தரவுப்படி, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொழிலாளா்கள், ஆதரவற்றோா் பயன்படும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரில் மீனாட்சிபுரம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை, அரசு மருத்துவமனை, மேலப்பாளையம், பேட்டை, மனக்காலம்பிள்ளைநகா், வையாபுரிநகா் உள்பட 10 இடங்களில் மாநகராட்சி சாா்பில் செயல்படும் அம்மா உணவகங்களில் அதிமுக சாா்பில் இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதன்கிழமை முதல் இம்மாதம் 31 வரை 10 உணவகங்களிலும் அதிமுக சாா்பில் உணவுக்கான பணம் செலுத்தி ரசீது பெற்று, ஆதரவற்றோா், தொழிலாளா்களுக்கு விலையின்றி வழங்கப்படும். காலையில் இட்லி, மதியம் சாம்பாா் சாதம், தயிா் சாதம் ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.