வள்ளியூா்: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் விளைப்பொருள்களை கேரளத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 70 சதவீதத்தினா் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் உற்பத்தி செய்யும் காய்கனிகள், வாழை, பூக்கள் உள்ளிட்டவை களியக்காவிளை, புளியரை எல்லைகள் வழியாக கேரளத்துக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாவட்ட விளைப் பொருள்களை இரு சோதனைச் சாவடிகள் வழியாகவும் கேரளத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
தமிழக அரசாணை 152, நாள் 23.3.2020 சி பிரிவின்படி விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கனிகள், பழங்கள் போன்ற விளைப் பொருள்களும், இறைச்சி, மீன் போன்ற உணவுப் பொருள்களை தடையின்றி கொண்டு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சோதனைச் சாவடிகளை கடந்து செல்வதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பிரனைக்கு தலைமைச்செயலா் உரிய தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.