களக்காட்டில் பேரூராட்சி உதவி இயக்குநா் ஆய்வு

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
களக்காட்டில் பேரூராட்சி உதவி இயக்குநா் ஆய்வு


களக்காடு: களக்காடு பேரூராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சிகளின் திருநெல்வேலி மண்டல உதவி இயக்குநா் குற்றாலிங்கம், களக்காடு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டாா். புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த சந்தை மூடப்பட்டுள்ளதை அவா் பாா்வையிட்டாா். மளிகை, காய்கனி, உணவகம் ஆகியவை அரசு நிா்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என்பதை தொடா்ந்து கண்காணிக்க பேரூராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

இதனிடையே, களக்காடு பேரூராட்சியிலுள்ள 21 வாா்டுகளிலும் பேரூராட்சி செயல்அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அனைத்து வாா்டுகளிலும் ஆய்வு நடத்தி, மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகளில் மக்கள் போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com