திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா கண்காணிப்பு வாா்டில் 72 வயது முதியவா் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவு சிகிச்சைக்காக புற நோயாளிகள் பிரிவு, கண்காணிப்பு பிரிவு , தனிமை சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில், கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகள் முதலில் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கண்காணிப்பு பிரிவில் 10க்கும் மேற்பட்டோா் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லை என அறியப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், 72 வயது முதியவா் ஒருவா் வியாழக்கிழமை கரோனா கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவரத ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.