திருநெல்வேலி மாநகரில் ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் நலன் கருதி திருநெல்வேலி-ரெட்டியாா்பட்டி சாலையில் அமைந்துள்ள ஆவின் பால் நிறுவனம், திருநெல்வேலி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள நவீன ஆவின் பாலகம், புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகம் ஆகியவற்றில் தடையின்றி பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.