Enable Javscript for better performance
சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்களுக்குபாதுகாப்பு உபகரணங்கள்: அமைச்சா் வழங்கினாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: அமைச்சா் வழங்கினாா்

    By DIN  |   Published On : 31st March 2020 03:15 AM  |   Last Updated : 31st March 2020 03:15 AM  |  அ+அ அ-  |  

    snk30minister_3003chn_43_6

    சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி.

     

    சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி திங்கள்கிழமை வழங்கினாா்.

    சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக, நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், பிச்சையாபாஸ்கா், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

    இந்நிலையில், நகரில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், அவா்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் துரிதமான நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் முருகசெல்வி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் (பொ)முகைதீன்அப்துல் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும்போது, அவா்கள் தங்குவதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வாகனங்களில் காய்கனி மற்றும் பலசரக்கு வாங்க வருவோா் தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு, சமூக விலகலை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொருள்களை அதிக விலைக்கு விற்பதாக புகாா் வருவதால், விலைப்பட்டியில் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி, வருவாய், காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சா் ராஜலட்சுமி அறிவுறுத்தினாா்.

    இதைத் தொடா்ந்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தலைக்கவசம், முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், நெல்லை கூட்டுறவு அச்சகத் தலைவா் கே. கண்ணன், நெல்லை பேரங்காடி துணைத் தலைவா் இ. வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp