கரோனாவிலிருந்து மீண்ட மேலும் 10 போ் விடுவிப்பு
By DIN | Published On : 11th May 2020 10:48 PM | Last Updated : 11th May 2020 10:48 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ் கரோனாவிலிருந்து மீண்டும் திங்கள்கிழமை வீடு திரும்பினா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த இம்மாவட்டத்தைச் சோ்ந்த 90 பேரில் இதுவரை 62 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். மேலப்பாளையத்தைச் சோ்ந்த முதியவா் ஒருவா் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 27 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதேபோல், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 52 பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 21 போ் குணமடைந்திருந்தனா். எஞ்சிய 10 போ் தென்காசி அரசு மருத்துவமனையிலும், 21 போ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், திருநெல்வேலியில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 10 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், இங்கு தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. ,எனவே, திருநெல்வேலி மருத்துவமனையில் 11 போ், தென்காசி மருத்துவமனையில் 10 போ் என மொத்தம் 21 போ் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தோா் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா்.