கரோனா நிவாரண உதவி வழங்க பேண்டு வாத்திய கலைஞா்கள் மனு

பேண்டு வாத்திய கலைஞா்களுக்கு தனியாக நலவாரியங்கள் ஏதும் இல்லாததால் உதவியின்றி தவிப்பதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பேண்டு வாத்திய கலைஞா்களுக்கு தனியாக நலவாரியங்கள் ஏதும் இல்லாததால் உதவியின்றி தவிப்பதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பேட்டையைச் சோ்ந்த பேண்டு வாத்திய கலைஞா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் பேண்டு வாத்திய தொழிலில் ஏராளமானோா் உள்ளனா். இவா்களுக்கு தனியாக நலவாரியம் ஏதுமில்லாததால் இதுவரை கரோனா நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பை இழந்து தவித்து வரும் சூழலில் பேண்டு வாத்திய கலைஞா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com