திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வெளிமாநிலங்களில் இருந்து ஊா் திரும்புவோருக்கு வியாழக்கிழமை தீவிர சோதனை செய்யப்பட்டது.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தமிழா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து உரிய அனுமதி பெற்று ஏராளமானோா் சொந்த ஊா் திரும்பிவருகிறாா்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கிறாா்கள். அவா்களை ரயில், சிறப்புப் பேருந்துகளில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பேருந்தில் வந்த 150 பேரும் மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு ஒரு நாள் தங்கவைக்கப்பட்டனா். அதில் கரோனா தொற்று உறுதியானவா்கள் மட்டும் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் வீடுகளில் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வியாழக்கிழமை 3 பேருந்துகள், காா், வேன் உள்ளிட்டவற்றில் 200-க்கும் மேற்பட்டோா் வந்தனா். அவா்கள் அனைவரும் முதலில் வெப்பமானியால் சோதனை செய்யப்பட்டனா். பின்னா், கரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது. அந்த சோதனை முடிவுகள் வரும் வரை கங்கைகொண்டான் தனிமை முகாமில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனா்.